முதலமைச்சர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை …!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

முதலமைச்சர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூறுகையில்,  முதலமைச்சர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை, நலத் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வரவே பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடைபெற்றது.அதேபோல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளிப் போட பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment