தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு தூத்துக்குடி மாநகர மாநாடு….!!

Default Image

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தூத்துக்குடி மாநகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநகர் மாநாடு தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான  P.C.V. நினைவு அரங்கில் நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு K.ஆறுமுகம் தலைமை தாங்கினார் , K. காசி முன்னிலை வகித்தார்.இந்த மாநாட்டை  K. பொன்ராஜ் அவர்கள்  துவக்கி வைத்து உரையாற்றினார்.Image result for தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புஇக்காலகட்டகத்தில் ஜாதிய அடக்குமுறையின் விளைவுகள் மற்றும் அதன் ஆதிக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த மாட்டை வாழ்த்தி பேச அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் P பூமயில் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தா.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தூத்துக்குடி மாநகரபுதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.இதில்  மாநகர் தலைவராக K.காசியும், செயலாளராக K.ஆறுமுகமும் , பொருளாளராக P பெருமாளும் , துணைத் தலைவர்களாக  K.மணவாளன், கருப்பசாமி,M.தசலிஸ். துணைச் செயலாளர்களாக A.M. முருகன், Lராமமூர்த்தி, நாகராஜன் மற்றும் கமிட்டி உறுப்பிணர்களாக வயனப்பெருமாள் , சர்க்கரைப் பாண்டி, ஜானகி, கணேசன், பாலகிருஷ்ணன், சுரேஸ், J.ஆனந்த், ஜேம்ஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்