மூட்டுவலியை குணமாக்கும் எருக்கன் இலை….!!!
நம்மில் அநேகருக்கு உடல் பெலவீனத்தினால் மூட்டுகளில் வலி ஏற்படும். இதனால் தங்களது வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு மாறி விடுகின்றனர். சிலர் நடக்க முடியாத நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். இப்படிபட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
நமது ஊரில் மிக சுலபமாக கிடைக்கும் எருக்கன் செடியின் 3 அல்லது 4 இலைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த இலையில் உள்ள மருத்துவ தன்மைகள் அனைத்தும் அந்த நீரில் இறங்கி விடும். பின் ஒரு துணியை எடுத்து வலி உள்ள மூட்டுக்களில் ஒத்தனம் கொடுத்தால் வலி நீங்கி விடும்.