இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!மீனவர்கள் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் ..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Default Image

காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
Image result for வானிலை ஆய்வு மையம்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .அதேபோல் அக்டோபர்  6-ஆம் தேதி முதல் தென் கிழக்கு வங்கக்கடல், கேரளாவை ஒட்டியுள்ள பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்  ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்