முகம் பளபளக்க பக்குவமான முறைகள்…!!!
பெண்கள் எப்பொழுதுமே பளப்பளப்பாக இருப்பதை தான் விரும்புகின்றனர். இதனால் அவர்கள் பல வழிகளில் பல முறைகளில் செய்து வருகின்றனர்.
புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.
கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசி கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.