"ரூபாய் 40,000 ரூபாய் 20,000_ஆக குறைகிறது" புதிய விதி அமுல் வங்கி வாடிக்கையாளர்கள் ஷாக்..!!
SBI வங்கியின் ATM சேவையில் புதிய மாற்றங்களை வங்கி நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இது வங்கி வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி சேவையில் தற்போது ஏராளமான மாற்றங்களை வங்கி நிர்வாகம் கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்திய சில காலங்களாக வங்கியில் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் ATM வழியாக பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதில் எஸ்பிஐ வங்கியில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 20,000 ரூபாயை மட்டும் தான் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியில் இதற்க்கு முன்பு ATM களில் 40,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.தற்போது அதை எஸ்பிஐ வங்கி 20,000 ரூபாயாக குறைத்துள்ளது.வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.அக்டோபர் 31ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
DINASUVADU