"ஆதார் தேவை இல்லை" நீக்கி டெல்லி அரசு அதிரடி…..!!

Default Image

ஆதார் தேவையில்லை என்று  டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இணையதளத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்துள்ள, துறைச் செயலர்கள் அவற்றை உடனே நீக்கும்படி, டில்லி அரசு உத்தரவிட்டுஉள்ளது.
மேலும், தங்களைப் பற்றிய தனிப்பட்ட எந்த விபரத்தையும், துறையின் இணையதளத்தில் அதிகாரிகள் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Image result for kejriwal
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. டில்லி மாநில தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு செயலர், அஜய் சக்தி, அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
அனைத்து துறை முதன்மை செயலர்கள், செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர், தங்கள் ஆதார் எண், மொபைல் போன் எண் உட்பட, தங்களது தனிப்பட்ட விபரங்களை, துறையின் இணையதளத்தில் பதிவேற்றிஉள்ளனர்.அவற்றை உடனடியாக நீக்கி விட வேண்டும். மேலும், அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட விபரத்தை, அரசின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்