திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை…!பட்டப்பகலில் பதற வைத்த சம்பவம்…!!

Default Image

தி.மு.க. பிரமுகர் ஒருவர் சென்னை – குன்றத்தூர் அருகே ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சிறுகளத்தூர் ஊராட்சியில் முன்னாள் கவுன்சிலரான கிரிராஜன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மைத்துனருக்கு அடைக்கலம் அளித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தையான, அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடன் சமாதானம் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், நந்தம்பாக்கம், கருமாரி அம்மன் நகரில் கிரிராஜனின் உடல், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. குன்றத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், காதல் ஜோடிக்கு அடைக்கலம் அளித்ததால், கிரிராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த பாபு, நண்பர்களுடன் சேர்ந்து கிரிராஜனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
இதனை யடுத்து, பாபு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த, கிரிராஜனின் உறவினர்கள், பாபுவின் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்