MGR நூற்றாண்டு விழா:தமிழகம் மின்மிகை மாநிலம்…!100 கோடிக்கு நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம்..!முதல்வர்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி  தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும்

இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது  உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்  என்று தெரிவித்தார்.

மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும்  சென்னையில் ரூ 100 கோடி மதிப்பில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம் விரைவில் என்று முதல்வர் அறிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment