பாலத்தின் அடியில் பரிதாபமாக கிடந்த 17 சிலைகள்….!!

Default Image

கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் பரிதாபமாக கிடந்த 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில்  மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஓரிடத்தில் சிலைகள் இருப்பதைக் கண்டனர்.

பின் இந்த சிலைகள் தொடர்பாக அவர்கள் தகவல் அளித்ததால் ஆரம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து வந்து 7 அம்மன் சிலைகள், ஒரு விஷ்ணு சிலை, ஒரு சிங்க சிலை, 2 நாக சிலைகள், ஒரு நந்தி சிலை, ஒரு மயில் சிலை, 2 பலிபீடங்கள், ஒரு ஐயப்பன் சிலை, ஒரு கருடன் சிலை என 17கற்சிலைகளை மீட்டனர்.

இந்தச் சிலைகளைக் கடத்தி வந்தவர்கள் இவற்றைப் பாலத்தின்கீழ் போட்டு விட்டுச் சென்றனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.தமிழக பாரம்பரியத்தை இப்படி பாலத்தில் போட்டு விட்டு ஒடிய கயவர்களின் செயல் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்