ஏர்போட்டில் ரசிகர்களின் அன்பில் திளைத்து நின்ற சிம்பு!

Default Image

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து வியாழன் ரிலீஸான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் ரசிகய்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள்.மட்டும் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் படம் ரிலீஸாகும் போது வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்த சிம்பு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஏர்போர்ட்டில் பலத்த வரவேற்பை அளித்தனர். ரசிகர்கள் அன்பில் திளைத்த சிம்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றி என்னுடையது அல்ல அது ரசிகர்களுடையது. இந்த வெற்றிக்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துவிட்டு கிளம்பினார்.

சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்