ஆசிய கோப்பை 2018 இறுதிப்போட்டி:வங்கதேச வீரர் தாஸ் அதிரடி சதம் ..!ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி ..!

Default Image

வங்கதேச அணி 39 ஓவர்கள் முடிவில்  167 ரன்கள் அடித்துள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் (கேப்டன் ),தவான் ,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,பூம்ரா,புவனேஸ்வர், சாகல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் அடித்துள்ளது.களத்தில்  தாஸ் 109 ரன்கள்,சர்க்கார் 10 ரன்களுடன் உள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்