கறிவேப்பிலையை காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்….!!!
கறிவேப்பிலையை பொறுத்தவரை அதில் அதிக அளவிலான சத்துக்கள் உள்ளது. அதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. ஆனால் நம்மில் அதிகமானோர் சமையலின் பொது சேர்த்தால் கூட அதன் பயனறியாமல் அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. அவற்றில் சில,
- காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பில்லை இலைகளை உண்டால், வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து எடுப்பான இடையை பெறலாம்.
- இரத்தசோகை இருப்பவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பலத்துடன், சிறிது கறிவேப்பிலையை உண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.