இராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த தமிழக 77 மீனவர்களை விடுவித்தது. இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று(ஆக., 3) இந்தியா திரும்புகின்றனர்.இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், ஜூலை 25ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரும், இன்று(ஆக., 3) காலை 9 மணிக்கு இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்படும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் இன்று மாலை காரைக்கால் வர உள்ளனர்.