கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு.. பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு.. பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு!

கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்கின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் த 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில், மே 22-ம் தேதி முதல் மீண்டும்பணிகள் தொடங்கப்பட்டது. தற்பொழுது அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கீழடியில் ஒரு குழி தோண்டும்போது, பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அந்த எலும்பு, சுமார் 3 மீட்டர் அளவில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Join our channel google news Youtube