மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2கோடி அறிவிப்பு…!

பாராஓலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவிப்பு. பாராஓலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சார்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கல பதக்கம் வென்றார். மாரியப்பன் பாராஓலிம்பிக் போட்டியில் இரண்டாவது பதக்கம் இதுவாகும். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாராஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்நிலையில், பாராஓலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு … Read more

கர்நாடக மாநிலத்தில் 1,217 பேருக்கு கொரோனா..!

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா வைரசால் 1,217 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,217 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,49,445 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,318 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,198 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 28,93,715 பேர் சிகிச்சை … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-22 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,512 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,512 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,14,872 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,921 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,725 பேர் … Read more

பீகாரில் கனமழை வெள்ளம்..!-43 பேர் பலி..!

பீகாரில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் விவரங்கள் வெளியீடு. இதுகுறித்து தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்காக தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட விவரங்களை … Read more

ஆந்திரப்பிரதேசத்தில் 1,115 பேருக்கு கொரோனா..!

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று கொரோனா வைரசால் 1,115 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,115 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,14,116 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் இன்று மட்டும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,857 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,265 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 19,85,566 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து … Read more

இன்று பிரணாப் முகர்ஜி நினைவு நாள்;”அவர் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்” – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள்,கடந்த 31.08.2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில்,அவர் இறந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில்,அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில்,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்,மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களின்,முதல் நினைவு சொற்பொழிவில் கூறியதாவது: “இந்திய ஜனாதிபதியின் மிக … Read more

அமெரிக்க ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தலிபான்கள்.!

ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள். ஆப்கானிஸ்தான் கந்தஹார் பகுதியில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கீழே ஒருவர் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கந்தஹார் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரைக் கொடூரமாக கொன்று தொங்கவிட்டதாகக் கூறி பல பத்திரிகையாளர்கள் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். கந்தஹார் மாகாணத்திற்கு மேலே தலிபான்கள் பறக்கும்போது … Read more

ஓபிஎஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உட்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து  போலீசார் வாகனத்தில் அழைத்து சென்று பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், … Read more

பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்…! காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர்..!

பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்ணை காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர்.  ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தான் பணியாற்றும் லக்னோவிற்கு ரேணுகாவை அனைத்து சென்றுள்ளார். அங்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து தனது விசாகப்பட்டினம் மாநகராட்சியில் வேலை கிடைத்திருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். அதன்பின் லக்னோவில் இருந்து, அடிக்கடி தொலைபேசி மூலம் … Read more