காஷ்மீரில் துப்பாக்கி சண்டை.! 2 பயங்கரவாதிகளை சுட்டுகொன்ற இந்திய ராணுவம்.! 

காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை ( வியாழக்கிழமை ) துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து, AK-47 ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன  ன் போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரை சேர்ந்தவர்கள என்றும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகிர் மஜித் நஜர் மற்றும் ஹனான் அகமது சே என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.