ஐபிஎல் 2024 : குல்தீப் சுழலில் சுருண்ட லக்னோ.. டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 2024:  முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7  விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரிலே  குயின்டன் டி காக் 19 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் 3 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்னிலும்,  நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதில் 8-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்க மறுமுனையில் இருந்த தொடக்க வீரரும், கேப்டனுமான கே.எல் ராகுல் நிலைத்து நிற்காமல் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் இறங்கிய தீபக் ஹூடா 10, க்ருணால் பாண்டியா 3 ரன்கள் எடுக்க இருப்பினும் ஆயுஷ் படோனி நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி 55* ரன்கள் எடுத்து  கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் , முகேஷ் குமார் , இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

author avatar
murugan