சென்னை: போலீஸ் அனுமதி அளித்தாலும், இல்லாவிட்டாலும் ஆகஸ்ட் 10-ம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், தமிழக அரசில் தற்போது நடைபெறும் ஊழல்களை கண்டித்து பன்னீர்செல்வம் தலைமையில் ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டம் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிவித்தார்.