தமிழக மீனவர்கள் கைது.!  மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் ,  குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள்,   இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே … Read more

என்.எல்.சியில் வெளிமாநில பொறியாளர்கள்… பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

நெய்வேலி என்.எல்.சி தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தவர்களுக்கு பட்டதாரி பொறியாளர் பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி தொழிற்சாலையில் அன்மையில் புதியதாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வெளிமாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என்.எல்.சிக்கு … Read more

போதைப்பொருளை ஒழிக்க ஒத்துழைப்பு தேவை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

போதைப்பொருளை தமிழகத்தில் ஒழிக்க அனைவரும் சரியான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் உபயோகம் அதிகரித்து கொண்டே வருவது மிகுந்த  வேதனை அளிக்கிறது. அந்த போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், போதைப்பொருளை தமிழகத்தில் ஒழிக்க அனைவரும் சரியான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் … Read more

திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலியை செலுத்து விட்டு ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர்..!அதிரடி காட்டும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்..!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு.தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் அதிரடி காட்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணும் பணிகள் கடந்த மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் 158 இடங்களில் வெற்றி பெற்றது.அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின்னர்,தமிழக முதல்வராக … Read more

பொது ஊரடங்கு விவகாரம்… முதல்வர் இன்று ஆட்சியர்களுடன் ஆலோசனை…

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று(செப்டெம்பர்,29) ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் பொது ஊரடங்கு வரும் செப்டெம்பர், 30ம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் … Read more

#Breaking : தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.!

தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும், எந்தவித தளர்வும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், … Read more

தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார். இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார். இவ்விழாவில் … Read more

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான … Read more