சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.!

Sabarimalai Ayyappan Temple - Makara Jyothi Dharisan

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.   கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர்,  டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் … Read more

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

Minister Sekar babu - Sabarimala Ayyappan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் … Read more

ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி.! தமிழக முதல்வர் கோரிக்கை.. கேரள அரசு நடவடிக்கை.!

Sabarimala Ayyappan Temple

ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக … Read more

101 வயதில் 18 படி ஏறி சபரிமலை ஐயப்பனை முதன் முறையாக தரிசித்த மூதாட்டி.!

Sabarimalai Ayyapan koil - Wayanad - Parukuttyamma

கார்த்திகை மாதம் துவங்கி விட்டது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்து சபரிமலை சென்று தரிசித்து வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. பக்தர்கள் வருகையை சமாளிக்க தேவசம்போர்டு , கேரள காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!

Heavy rain in Sabarimalai

வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..! தரிசன நேரம் அதிகரிப்பு..!

சபரிமலையில்  பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அதிகரிப்பு.  மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சபரிமலையில் காலை 4 முதல் பகல் 1 மணி … Read more

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்.! கேரள அரசு அதிரடி உத்தரவு.!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர்.  இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், … Read more

சபரிமலைக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே இன்று முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு..!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து … Read more

#Breaking : சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் …!

பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. … Read more