நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் படி “பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டம்” 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இனி நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். கேரளாவின் சுகாதாரத் துறை 11 மாவட்டங்களில் புதிய பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை வீட்டிலேயே டயாலிசிஸ் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தியுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தின் அதிகரிப்பு ஹீமோ டயாலிசிஸை படிப்படியாகக் குறைப்பதன் ஒரு பகுதியாகும். தற்போது இந்த வசதி திருவனந்தபுரம், […]
கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் தினக்கூலியை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3,000 வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 1.60 லட்சம் மீனவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழையால் அதிக எண்ணிக்கையிலான வேலை […]
கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் நாட்களில் ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும், பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், […]
கேரளாவில் கொரோனா காரணமாக வரும் திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் திங்கள் முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் […]
லட்சதீவின் சீர்திருத்தங்களை எதிர்த்ததற்காக சைபர் தாக்குதலை சந்தித்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் சீர்திருத்தத்திற்கு எதிராக ட்வீட் செய்த நடிகர் பிரித்விராஜ் மீது லட்சத்தீவின் வலது சாரிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர் பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வுகள் கேரள மக்களின் உணர்வு, பிரித்விராஜ் அதனை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி எனவும் மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், குழந்தைக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார். We will provide a special package for children who have lost their parents […]
கேரள முதலமைச்சராக 2-வது முறையாக பினராய் விஜயன் பொறுப்பேற்றுள்ளார். கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழா திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் […]
நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16 வரை முழு ஊரடங்கு என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். As directed by the CM, the entire State of Kerala will be under lockdown from 6am on 8 May to 16 May. This is in the background of a strong 2nd wave of #COVID19. — CMO Kerala (@CMOKerala) May […]
“இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம்” என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர். 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, 61,000 […]
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது வழக்கமான கொரோனா அறிவிப்பிற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நிதிச் சுமை: மேலும் அவர் கூறுகையில்,”மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுமாறு மத்திய அரசு கூறியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மாநிலங்களுக்கு ஏற்கனவே […]
மத்திய அரசிடம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை. அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே மாநிலத்தில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும், கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை வைத்தார். அவர் எழுதிய கடிதத்தில் தடுப்பூசி பற்றாக்குறை சுகாதார மற்றும் குடும்ப நல […]
மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடவுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தொகுதிபங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் சுயேட்சைகள் உள்பட 83 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயனும், கேரள சுகாதாரத்துறை […]
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது […]
கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் […]
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,347 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,79,922 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 57,879 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள […]
நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் […]
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சுகாதார பணியாளர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட […]
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715 பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
“வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் […]