பிரதமர் மோடியின் தாயார் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்…!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி … Read more

தாயாரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

உங்கள் அம்மா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..! பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!

மோடி ஜி இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி ட்விட்.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று  இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்கும் மகனுக்கும் இடையிலான அன்பு நித்தியமானது, விலைமதிப்பற்றது. மோடி … Read more

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக யூ.என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!

கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்.  சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், பிரதமர் மோடி, கூட்டம் மிகுந்த பொது இடங்களில் … Read more

இந்தியாவுக்கு 2 தந்தைகள்.! ஒன்று மகாத்மா காந்தி.. இன்னொன்று பிரதமர் மோடி.! மகாராஷ்டிரா துணை முதல்வர் மனைவி கருத்து.!

மகாந்தமா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேச தந்தைகள் – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ் அண்மையில் தேசத்தந்தை பற்றிய கருத்தை வெளியிட்டுளளார். அதில், நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார். அவர் மேலும் கூறுகையில், நமது நாட்டிற்க்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல புதிய … Read more

கபடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.! – பிரதமர் மோடி பேச்சு.!

2023 சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் எம்பிக்கள் மக்களிடையே பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.  டெல்லியில் இன்று நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், அடுத்த 2023ஆம் ஆண்டை ஐநா சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. அதனால், எம்பிக்கள் கூட்டத்தில் பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தினை பொருட்களை பிரச்சாரம் செய்தவன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார். மேலும், கபடி … Read more

பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை..!

பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் நேற்று பிரதமர் மோடியை  சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. தங்களுடைய ஆட்சி அமைந்த பின் இந்தியாவில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களை பெற்றுள்ளதாகவும் இது சிறந்த உத்வேகத்தை அளிப்பதாகவும் … Read more

நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என முதல்வர் ட்விட்.  தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்கனவே  நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக கடிதம் எழுதி இருந்தேன். எங்களது தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இதற்கான மசோதா குறிப்பிடத்தக்க … Read more

பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது – சிபிஐஎம்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம் விமர்சனம்.  பிரதமர் மோடி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்கு வழிகளை கடைபிடித்து உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார். … Read more