சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இந்த விழா தொடங்கியது எதிர்ப்புகளுக்கு மத்தியில் முடிந்தது சர்ச்சையில் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து […]
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் காலமானார். அவருக்கு வயது (82). திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் 55 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்த இவர் முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார். இவருடைய இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்தியையும் வெளியீட்டு […]
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் உதயநிதிக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு […]
டெல்லி : தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று மாலை புறப்பட்டு சென்ற அவர் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கான நிதி […]
வாழை படம் வெளியான நாளிலிருந்து இப்போது வரை நம்மளைக் கண்ணீரில் கரைய வைத்துக்கொண்டு, இருக்கிறது என்றே சொல்லலாம். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தைத் தழுவி ‘வாழை’ படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் மக்களைத் தாண்டி பல எமோஷனலான படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கே தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக, சேது, பிதாமகன், அவன் இவன், போன்ற எமோஷனலான படங்களை இயக்கிய இயக்குனர் பாலவே வாழை படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தி, […]
நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து […]
சென்னை : விவசாயிகளின் பல ஆண்டுகால கனவாக இருந்த ‘அத்திக்கடவு- அவினாசி’ திட்டத்தை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் கோவை, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை சென்னையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவம், மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை சம்பவம் என தமிழகத்தில் கடந்த ஒருசில மாதங்களில் அரசியல் பிரமுகரின் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே போல, கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை , மதுரை மூதாட்டிகள் கொலை என பல்வேறு கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. இவ்வாறான கொலை சம்பவங்கள் குறித்து ஆளும் […]
மு.க.ஸ்டாலின் : இன்று ஜூலை 18 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடுக்கு தமிழ்நாடு என்ற பெயர் கடந்த 1969 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வைக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை “மதராஸ் ஸ்டேட்” என்ற பெயரில் இருந்து தமிழ்நாடு என்ற பெயரை கொண்டு வந்தார். இதனையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அந்த […]
விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி […]
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று பெரம்பூர் பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தங்களுடைய கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள். சில அரசியல் தலைவர்கள் பலரும் பகுஜன் […]
ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தியின் பிறந்தநாளான இன்று, நாடுமுழுவதும் உள்ள கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி, கடந்த 1970-ம் ஆண்டு ஜுன் 19-ம் தேதி பிறந்தார். ஜவாஹர்லால் நேருவின் வம்சாவளி என அடையாளம் காணப்பட்ட ராகுல் காந்தி தற்போது தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு உதாரணமாக […]
சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். கடந்த மே 20-ஆம் தேதி ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்திய […]
சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. அதில் பேசிய பிரதமர் மோடி” நம்மளுடைய வீட்டு சாவி காணாமல் போய்விட்டது என்றால் நாம் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், 6 ஆண்டுகளாக ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி […]
சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]
M.K.Stalin : தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார். கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார் இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவர் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நடப்பு உலக செஸ் சாம்பியனான சீன க்ராண்ட்மாஸ்டரான டிங் […]
Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது,அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை […]
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 23-ம் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் […]
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 11.30 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்”தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22-ம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி […]
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது ” மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.சென்னையில் காலையில் மழை பெய்தது. அதேபோன்று முதலீடு மழையாகப் பெய்யும் என நம்புகிறேன். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால் அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் கோட் சூட் அணிந்துள்ளேன் என தெரிவித்தார். டாடா நிறுவனத்துடன் ரூ.12,082 கோடி ஒப்பந்தம்.. 40,500 […]