C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் […]
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதல்களில் 50 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளனர்.
காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மொகுல் சாலை காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ரஜோரி மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். ஆனால் பெய்து வரும் தொடர் பனிப்பொழிவால் சாலை மூடப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பாகல்கம் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பல இடங்களில் சாலைகளில் கொட்டியுள்ள பனியை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸில் குளிர் […]
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்புப் படையினர் பதிலடிக் கொடுத்தனர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்ப்டடனர்.இதனிடையே, சம்பா பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்கள், […]
காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவுவதும் அதை முறியடிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்தப் பகுதிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் […]
ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயன்ற நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த காஷ்மீரில், இரு கட்சிகள் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு, ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்கட்சியான தேசிய மாநாட்டு […]
ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீரில் மலைகள்,மரங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூஞ்ச் மற்றும் சோபியான் மாவட்டங்களை இணைக்கும் மொகுல் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுள்ளது.தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், ஒரு வழிச்சாலையாக பயன்படுத்தப்படுவதால் வாகன […]
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், 4,500 கிராம ஊராட்சிகளுக்கும், 35,000 ஊராட்சி வார்டுகளுக்கும் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 536 கிராம ஊராட்சிகளுக்கும், 4,048 ஊராட்சி வார்டுகளுக்கும் சனிக்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 6 மாவட்டங்களிலும், லடாக்கில் ஒரு மாவட்டத்திலும், ஜம்முவில் 7 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து […]
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியதுள்ளது இந்திய ராணுவம். ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் ராணுவ வீரர்கள் மூவர் காயம் அடைந்தனர்.அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அவர்களில் ஒரு வீரர் மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில் பாதுகாப்பு படைகள் நடத்திய […]
குங்கும பூ அழ உடனே நமக்கு நியாபகம் வருவது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு அதனை கொடுத்தால் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பது தான்.ஆனால் அதனை கொடுத்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்பது தெரியாமலே கணவன்மார்கள் உடனே குங்கும பூ வாங்கி கொடுப்பார் .ஆனால் உண்மையிலேயே குங்கும பூ கொடுப்பதால் குழந்தை கறுப்பாகவே பிறக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .அதனை பற்றி கீழே காண்போம் . குங்கும பூ குங்கும பூ தாவரத்தின் நுனியில் இருந்து கிடைக்கும் காம்புகளை […]
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நவ்போரா லஸ்ஸிபோரா பகுதியில் உள்ள ஒரு பயங்கரவாதியின் வீட்டை இன்று பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தரைமட்டமாக்க முயன்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சூழ்ந்துகொண்டு தடுத்தனர். அவர்களை விலக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் சிலர் கற்களை வீசி பாதுகாப்பு படையினரை தாக்கினர். நிலைமை கட்டுமீறிப் போனதால் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் அகமது ரத்தர் என்னும் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராணுவ அதிகாரி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
திருச்சி:மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது.மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பசீர்அகமது தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வகித்தார். வக்கீல்கள் தமிழகன், குணசீலன், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி உமாமகேஸ்வரி, மக்கள் பாதை ஸ்டீபன், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு […]
காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜேரி மாவட்டத்தில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் அத்துமீறி நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ veeவீரர்கள் நான்கு பேர் பலியாகினர். இந்த அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவி அங்குள்ள இளைஞர்களிடையே தீவிரவாதத்தை பரப்பி தீவிரவாதிகளாக இளைஞர்களை மாற்றி வருகின்றனர். ஏற்கனவே அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக ரயில் சேவை 50வது தடவையாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் 117 காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி உள்ளனர். இந்த தகவல் அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source : www.dinasuvadu.com
காஷ்மீர் மாநிலத்தின் கேரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு இந்திய ரானுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இன்னும் சண்டை நடந்து வருவதால் அந்த பகுதி பதற்றமாக இருக்கிறது. source : www.dinasuvadu.com
காஸ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, போராட்டத்துக்கு அலைப்புவிடுத்ததன் காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவையானது, இன்று மீண்டும் செயல்பட தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 50வது முறையாக காஷ்மீரில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. source : www.dinasuvadu.com
இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் மீது 1300 முறை தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் சுமார் 52 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 175 பேர் கடும் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாடியுள்ளார். பாகிஸ்தான், இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறும்போது, ‘ காஷ்மீர் மீது இந்திய அரசாங்கம் அடக்குமுறைநடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் […]