தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Income tax department

IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு … Read more

ரூ.65 கோடி வரியை வருமானவரித்துறை வசூலிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம்

Congress: வருமானவரித்துறை, ரூ. 65 கோடி வரிபாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. … Read more

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தற்காலிக அனுமதி!

congress

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் வங்கி கணக்குகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டாக காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மாக்கன் குற்றசாட்டை முன்வைத்தார். இதுபோன்று, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். அதில், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, … Read more

Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

Finance Minister Nirmala Sitharaman - Income Tax

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் … Read more

ITR இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழைய முடியவில்லையா? நீங்கள் ரூ. 1,000 செலுத்த வேண்டியிருக்கும்..

ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை. மதிப்பீட்டு ஆண்டு (AY) 2022-23க்கான வருமானத்தைத் தாக்கல் செய்ய, வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் உள்நுழைய முயற்சிக்கும் போது  முன்பு அவர் அமைத்த கடவுச்சொல்லை நிராகரித்தது. ஆதார் OTP ஐப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன, மேலும் அவரது பான் எண்ணுடன் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வந்தது. அவரது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க முயற்சித்தபோது, … Read more

வருமான வரித்துறையினர் போல நடித்து 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் ….!

பொள்ளாச்சியில் வருமான வரித்துறையினர் போல நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டிலிருந்து 20 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தான் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அடையாளம் காண்பித்து  வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீட்டை … Read more

“பெட்ரோல்,டீசல் மீதான வரி குறைப்பு?..வருமான வரிச் சலுகைகள் வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது,பெட்ரோல்,டீசல் மீதான வரிகளைக் குறைத்தல்,வருமான வரிச் சலுகைகள்,150 நாள் வேலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாகவும்,நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் எனவும்,ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல் ஆகியவற்றுடன் … Read more

ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளேன் – எலான் மஸ்க் ட்வீட்!

சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், … Read more

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பொறுப்பேற்றார்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை வருமான வரித்துறை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பதவியேற்பு. தமிழ்நாடு, புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 1987-ல் வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் 34 ஆண்டுகால பணியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான அகடாமியில் பயிற்சி பெற்ற பிறகு, சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். 34 ஆண்டுகளாக அவரது பணியில் மதிப்பீடு, தீர்ப்பாயம் … Read more

#Breaking:சென்னையில் 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலம் – வருமான வரித்துறை தகவல்..!

சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலமாகியுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள்,பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. மேலும்,சென்னையில் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.