கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார். மக்களிடம் பேசிய அவர், வீடு கட்டி தருவதற்கு ரூ.50 ஆயிரம் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அரசு உரிய முறையில் உதவிகள் மக்களை சென்றடைய உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தேர்தல் அறிவித்த உடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் பழனிசாமி அதற்கான வியூகம் அமைத்து வருகிறார்.கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் பேரணியாக சென்று துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கஜா புயல் கரையை கடந்த போது நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. இந்த நிலையில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாக சென்ற ஏராளமான விவசாயிகள், துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தங்கள் கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் […]
கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் மரக்கன்று நடப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்துள்ளது. புயலுக்கு பின் பள்ளிகள் எல்லாம் தற்போது தான் இயங்க துவங்கி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த மாதம் கஜா புயல் டெல்ட்டா மாவட்டங்களை கோரத்தாண்டவம் ஆடியது.குறிப்பாக தஞ்சை , நாகை மற்றும் புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுட்க்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் , மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் […]
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கோரும் தகவல்களை வழங்க மாநில அரசு தாமதிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, கஜா பாதிப்பு தொடர்பான மத்திய அரசு குழுவின் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய ஏன் காலதாமதம் ஆகிறது என்று கேள்வி […]
இன்று வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு […]
நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான தென்னைகளிலிருந்து கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முடையப்பட்ட 100 கீற்றுகளை அதிமுக சார்பில் ரூ.800க்கு வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாளை வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண […]
கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் வைரமுத்து கூறுகையில், கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் .கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும்.மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக […]
மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது .மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக பிரதமரை சந்தித்து இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் […]
படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், இதுவரை 1000 கடைகள் மூடப்பட்டுள்ளது, படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.கஜா புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மின்சீரமைப்பு பணி நிறைவடையும்.அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், தமிழகத்தில் 2023-ம் ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விளை நிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கும் போது சில அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தூண்டிவிடுகின்றது.நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு வங்கிகளின் சார்பில், 6 கோடி ரூபாய்க்கான வரைவோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, […]
கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அருகே திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மத்தியஅரசில் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1,400கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். […]
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் .பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்றும் மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பலரும் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சசி குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றும் ஆறுதலாக பார்த்து பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் அங்குள்ள மக்களை பார்த்து 2 வாரம் கழித்து வந்து பார்க்கும் எனக்கே இவ்வளவு கவலையாக உள்ளது. எப்படியம்மா இதெல்லாம் தாக்கிக்கிட்டிங்க என்று கேட்டுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்து சென்றே பார்த்துள்ளார். இந்நிலையில், ஒரு […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரமோடி கண்டிப்பாக வருவார் என தமிழிசை கூறியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த தமிழிசை பிரதமரின் பிரதிநிதிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி கண்டிப்பாக வருவார் என கூறியுள்ளார்.