கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோடு சேர்ந்து தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவரயான்பட்டியில், வாட்ஸ்அப் குருப் நண்பர்களால், தமிழகத்தின் தலைசிறந்த நாடக கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம் நடத்தி, கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், […]
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் வீசிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்புகளை முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
இன்று வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு […]
நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், நூறு நாள் வேலை திட்டத்தில் புயலில் சேதமான தென்னைகளிலிருந்து கீற்றுகளை எடுத்து முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முடையப்பட்ட 100 கீற்றுகளை அதிமுக சார்பில் ரூ.800க்கு வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஓட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று ஓரிரு நாட்களில் தெரியும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண […]
புதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்தால் தான் சென்னைக்கு புறப்படுவேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதிசெய்த பின்பு தான் சென்னைக்கு புறப்படுவேன் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற என்ற அணியில் உள்ளவர்கள் தவறான புரிதலில் உள்ளனர் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், மேகதாதுவில் ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.மதச்சார்பற்ற என்ற அணியில் உள்ளவர்கள் தவறான புரிதலில் உள்ளனர்.காவிரியில் ஆணையம்தான் முழு அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின் கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பொறுத்துதான் வஞ்சகம் செய்கிறதா இல்லையா என்று தெரியும் […]
கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் வைரமுத்து கூறுகையில், கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் .கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும்.மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக […]
மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது .மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக பிரதமரை சந்தித்து இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் […]
படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், இதுவரை 1000 கடைகள் மூடப்பட்டுள்ளது, படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.கஜா புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மின்சீரமைப்பு பணி நிறைவடையும்.அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், தமிழகத்தில் 2023-ம் ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விளை நிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கும் போது சில அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தூண்டிவிடுகின்றது.நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14,678 மருத்துவ முகாம்கள் மூலம் 9.64 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வரை போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடரும்.தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தற்போதே வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அரசு பரிசீலனை செய்யப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தற்போதே வழங்க பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட நகர பகுதிகளில் முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் வருங்கால இந்தியா என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மாசில்லாத எரிபொருள் தயாரிப்பிற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மின்சார துறைத் அமைச்சர் தங்கமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு கார் பந்தயத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் […]
கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அருகே திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மத்தியஅரசில் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1,400கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிப்படைந்த மரங்களை அகற்ற, மர அறுவை இயந்திரம் வாங்க தமிழக அரசு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், உள்பட 12 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. இதன் காரணமாக மரங்களை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது. இதற்காக மரம் அறுவை இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது மேலும் மரங்களை […]
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். […]
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் .பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்றும் மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை உடனே கைவிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.