தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை ! தேர்வுகளும் ஒத்திவைப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும்  வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.    இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக  துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார்.மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரம் :  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ்

காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வந்த காஷ்மீர் விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் முற்றுப்புள்ளி வைத்தார்.அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார். அமித் ஷா இந்த அறிவிப்பை அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடும் எதிர்ப்புக்கு … Read more