பாலிவுட் பட பாணியில் குற்றவாளிகளை மடக்கிய போலீசார் – வைரல் வீடியோ உள்ளே!

பாலிவுட் பட பாணியில் உணவகத்தில் அமர்ந்திருந்த கொள்ளை கும்பலை போலீசார் மடக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று அகமதாபாத்தில் சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த நான்கு குற்றவாளிகளை போலீசார் பாலிவுட் பட பாணியில் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கொடூரமான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  வீடியோவில் உணவகத்தில் மாற்று உடையில் அமர்ந்திருந்த … Read more

திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழப்பு..!

தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன்(50) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை கோவாவில் இறந்ததாக தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவால் திரைப்பட துறையினர் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் மிகவும் திறமையானவர் என்றும் இவரை இழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ரியான் ஸ்டீபன் இந்தூ கி ஜவானி என்ற படத்தையும் தேவி என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த … Read more

78 வயதான மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார்.  பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் … Read more

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று…!

தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பல அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழில் வாரணம் ஆயிரம்,வெடி மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து நடிகை … Read more

பாலிவுட் நடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜாவேத் அக்தர்!

பாலிவுட் நடிகை கங்கனா மீது ஜாவேத் அக்தர் அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா தற்பொழுது அண்மை காலங்களாகவே பரபரப்பு உலகிலும் அடிக்கடி வலம் வருகிறார். அம்மாள், ஏதுனும் ஒரு புகாரில் அல்லது பிரச்சனைகளில் சிக்குவது தற்பொழுது இவருக்கு வழக்கமாகி விட்டது. அண்மையில் கூட மற்ற பிற பிரபல நடிகைகளுக்கு எதிராக இவர் பேசியிருந்தார். இந்நிலையில், நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை கங்கனா காதலிப்பதாக திரையுலகில் வதந்தி பரவிய … Read more

போதைப்பொருள் விவகாரம் – தீபிகா மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை!

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்தது தொடர்பாக பாலிவுட் திரையுலகில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் திரையுலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பல பாலிவுட் நடிகர்கள் இடமும் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். அதில் பலர் … Read more

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா.? என விசாரணை.!

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை. கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். தன் மகன் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு … Read more

பிரபல நடன இயக்குனர் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் காலமானார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சரோஜ் கான். இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூச்சுத்திணறல் காரணமாக ஜூன்-20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் இருவர், தாய் வீடு சிருங்காரம் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் தலைமையில் விளையாட்டு அறக்கட்டளை.! குடும்பத்தாரின் நெகிழ்ச்சி செயல்.!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்தினர் ஒரு விளையாட்டு அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க உள்ளனராம். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாலிவுட் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவரது மறைவு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது மறைந்த … Read more

திடீர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகரின் உயிர் பிரிந்தது!

நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் ரிஷி கபூர் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை நடிப்பில் வெளியான, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில், கடந்த … Read more