ஆம்புலன்சில் பிறந்த ஆண்குழந்தை – பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்..!

ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெர்றேடுத்த பெண்.  ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெண் ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார்.  உதவியாளர் அஜித்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி : மீன் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு..!

சென்னை, அம்பத்தூர் அருகே மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.  சென்னை, அம்பத்தூர் அருகே வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை, கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள், அவர்களது வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க சென்ற குழந்தை மீனாட்சி மீன் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்துள்ளார்.  குழந்தை விழுந்து சிறிது நேரம் கழித்து தான் … Read more

21 நாள் சிசுவின் வயிற்றில் வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள்.  ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக … Read more

கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை…! போலீசார் தீவிர விசாரணை…!

தூத்துக்குடி ரோச் பூங்கா கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே உள்ள கடலில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் … Read more

பொள்ளாச்சி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை..! 6 தனிப்படை அமைப்பு.., 24 மணி நேரத்தில் குழந்தை மீட்பு..!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யுனிஸ், இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி திவ்யா பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 29-ஆம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திவ்யபாரதி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம … Read more

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை…! மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை இழுத்து சென்ற தெருநாய்கள்..!

ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானா மாநிலம் பானிபட்டில், ஹார்ட் அண்ட் மதர் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், ஜூன் 25 அன்று, ஷப்னம் என்ற கர்ப்பிணிப் பெண் குழந்தையை பெற்றேடுப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் இரவு 8:15 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஷப்னம் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொது வார்டில் … Read more

அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் .., இல்லாவிட்டால் இந்தியா இந்துக்கள் இல்லா நாடக மாறிவிடும் – யதி நரசிங்கானந்த்!

அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார். ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் தான் தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த். இவர் ஜமீனிலிருந்து வெளியாகிய இரு நாட்களிலேயே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசியிருந்தார். தற்போதும் இவர் வரும் 10 ஆண்டுகளில் இந்தியா இந்துக்கள் இல்லாத நாடாக மாறுவதை தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்க வேண்டும் … Read more

ஒன்றரை வயது குழந்தையுடன் பள்ளி சென்ற சிறுமியை நேரில் சந்தித்த

கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக மணிப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது ஒன்றரை வயது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. எனவே, இந்த குழந்தைக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் மணிப்பூர் மந்திரி தோங்கம் பிஸ்வஜித் சிங் தற்பொழுது இந்த சிறுமியை நேரில் சென்று பார்த்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஒரு … Read more

தனது சிறிய சகோதரியுடன் பள்ளிக்கு வரும் நான்காம் வகுப்பு மாணவி.., வைரலாகும் புகைப்படம்..!

பெரியவர்களை விட்டு சிறிய வயது குழந்தைகள் வீட்டிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை பராமரிப்பதில் கெட்டிக்காரர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயது முதலே தங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு பல மூத்த சகோதரர்கள் தாயக வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில், மணிப்பூர் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, கைக்குழந்தையாக தனது சகோதரியுடன் பள்ளி சென்று பாடம் பயின்று வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைக்கு சரியான பராமரிப்பு … Read more

அதிர்ச்சி : மைக்ரோவேவ் ஓவனுக்குள் இறந்த நிலையில் இரண்டு மாத பெண்குழந்தை..!

தெற்கு டெல்லியில் டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அடுப்பிற்ற்குள் 2 மாத குழந்தை  தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயே … Read more