அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று துவக்கம்

உத்தர பிரதேச அயோத்தியில் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட   கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  உச்சநீதிமன்றம்அனுமதி கொடுத்தது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பித்தது.  இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதற்கு  தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த மாதம் 11-ம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் … Read more

அயோத்தி தீர்ப்பு சம்பந்தப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று விசாரணை.!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த மாதம்  09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது. … Read more

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் … Read more

இனி அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனு இல்லை..! சன்னி வக்பு வாரியம்..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் ,உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் என தீர்ப்பளித்தது. … Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டஅவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தரவேண்டும் என கூறியது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்பதா அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் … Read more

அயோத்தியில் ராமர் கோவில் எப்போது கட்டிமுடிக்கப்படும்?! தற்போது வரை என்ன வேலைகள் நடைபெற்றுள்ளன?!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் எனவும் அதில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட ஏற்பாடுகள்தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொடுத்த வரைபடத்தின் படி ராமர் கோவில் கட்டமைக்கப்பட்ட உள்ளது. கட்டப்படும் கோவிலின் உயரம் … Read more

அயோத்தி தீர்ப்பு : காங்கிரஸ் கட்சி ஆதரவு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சன்னி வக்ஃபு வாரிய அமைப்பிற்கு 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் … Read more

ராமர் கோயில் கட்ட தங்கத்தால் ஆன ஒரு செங்கல்..! இளவரசர் யாகூப் ..!

நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.அதன் படி நேற்று காலை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்தது. மேலும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கருக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் என கூறினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றனர்.இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்  பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என … Read more

இது தீர்ப்பாக அமையவில்லை- அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவன் கருத்து

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அயோத்தி தீர்ப்பு குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. பாபர் … Read more

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் – ஹெச்.ராஜா பேட்டி

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்  என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அயோத்தி தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் அயோத்தியில் கோயில் கட்ட அனுமதி அளித்தது. இந்த நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் .உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது. தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று  … Read more