எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது – டிடிவி தினகரன்

TTV DHINAKARAN

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மா … Read more

துரோகிகளை வீழ்த்தும் காலம் நெருங்கி விட்டது – டிடிவி

TTV DHINAKARAN

வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவையில் அமமுக சார்பில் கழக செயல்வீரராகள் கூட்டம் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட புரட்சித் தலைவர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது … Read more

இபிஎஸ் உடன் ஓபிஎஸ் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம்.! டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிவிப்பு.!   

TTV Dhinakaran - Edappadi Palanisamy - O Panneerselvam

அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்வுகளில் கலந்துகொன்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து, தமிழக அரசியல் நிலவரம், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். தமிழகத்தில் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக முடியவில்லை என்றால் எங்கே இருக்கிறது உங்கள் சமூக நீதி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் … Read more

இது ஆட்சியல்ல, வெற்று நாடகக் காட்சி – டிடிவி

எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம். தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என … Read more

உண்ணாவிரத போராட்டம் – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என டிடிவி ட்வீட்.  சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னும், பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி … Read more

பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

திமுக அரசுக்கு கடும் கண்டனம் – டிடிவி தினகரன்

திட்டங்களைக் கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 100 நாள் வேலை ஒதுக்கீடு, சாலை வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்த ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. … Read more

திமுக அரசாணையை எதிர்த்து அமமுக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.! டிடிவி தினகரன் எச்சரிக்கை.!

காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க … Read more

திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – டிடிவி தினகரன்

திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என டிடிவி தினகரன் விமர்சனம். வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்யான வாக்குறுதி அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். திமுக அமைச்சர்களின் ஆணவ பேச்சு தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுகவை … Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர் – டிடிவி தினகரன்

மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி … Read more