பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆகவே கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் நட்டா.மேலும் தனது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா […]
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதையடுத்து, தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்கள் இயங்க ஆரம்பிக்க தொடங்கினர். இதனால், ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,15,174 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ .21,365 கோடி, […]
கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் […]
ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர்கள் பங்கேற்றனர். கலங்கரை விளக்கத் திட்டங்கள் : இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாட்டிலேயே முதல்முறையாக, கட்டுமானத் தொழிலில் புதுயுக மாற்று சர்வதேசத் தொழில்நுட்பங்கள், பொருள்கள் மற்றும் […]
மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது சொத்தில் ஒரு பாதியை தனது நாய் ஜாக்கிக்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஓம் நாராயண் வர்மா என்ற விவசாயிகு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கள் குடும்ப சண்டைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்துள்ளார். அதில், அவரது மரணத்திற்குப் பிறகு தனது மனைவி சம்பா பாய் மற்றும் நாய் ஜாக்கி ஆகியோருக்கு தனது சொத்தின் சட்டப்பூர்வ வாரிசாக மாற்றியுள்ளார். அவர் தனது சொத்தில் எதையும் தனது […]
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் […]
டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.1 ° C ஆக பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத வெப்பநிலையாகும். மேலும், மிகவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இன்று காலை 6 மணியளவில் 0 தெரிவுநிலையுடனும், காலை 7 மணிக்குப் பிறகு, தெரிவுநிலை சுமார் 150 மீட்டராக காணப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7.1 டிகிரி செல்சியஸ், கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகரில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும். இந்நிலையில், டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி […]
கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை நாளை மேற்கொள்ளப்படுகிறது.இது அனைத்து மாநிலத் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான பணியில் ஈடுபடும் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என மொத்தம் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையடுத்து சன்னிதான பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என […]
கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய கேரளாவின் பத்னாபுரம் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக கேரள பெண்மணி பதவியேற்றுள்ளார். 46 வயதான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அனந்தவல்லி எனும் பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர பணியாளராக கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் 6 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றிய இவருக்கு தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாழ்க்கையே மாறியுள்ளது. அவர் வேலை பார்த்த அதே அலுவலகத்தில் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவிக்காததால் கேரள பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றினார். சபையின் சிறப்பு கூட்டத்தில் குரல் வாக்கு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏ தீர்மானத்தை எதிர்க்கவில்லை. தீர்மானத்தின் சில வாசகங்களை […]
ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் அறிவிக்க இருக்கும் பிரதமர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய […]
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த வினோத் குமார் யாதவின் பதவிக்காலம் இன்றுடன் டிசம்பர் 31 முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக சுனீத் சர்மாவை நியமனம் செய்யப்பட்டுள்ளது. சுனீத் சர்மா 1978ல் சிறப்பு வகுப்பு ரயில்வே பயிற்சி அதிகாரி, கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ஜி.எம். மெட்ரோ ரயில்வே […]
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று […]
உத்தரபிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவரை சகமாணவரே சுட்டுக்கொன்றார். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே உட்காரும் இடத்திற்காக நேற்று சண்டைபோட்டுள்ளனர். இதனால் கோப்படைந்த ஒரு மாணவர் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து வந்து சகமாணவரை சுட்டுக்கொன்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு சிறுவர்களும் 14 வயது என்றும், நேற்று வகுப்பில் உட்காரும் இடத்திற்காக சண்டையிட்டனர். அவர்களில் ஒருவர் மிகவும் கோபமடைந்தார். இதனால், அவர் தனது மாமாவின் துப்பாக்கியை பள்ளிக்கு […]
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு அதன் புதிய தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களின் நான்கு தலைமை நீதிபதிகளை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு எஸ்சி கல்லூரி சமீபத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. முன்னோடியில்லாத வகையில், ஆந்திர மாநில முதல்வர், அக்டோபர் 6 ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ் ஏ போப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார், ஜனநாயக […]
கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? […]
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு அனைத்து வாய்ஸ்கால்களும் ஜனவரி 1 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலித்தது, ஆனால் தனது ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், ஜியோ வாய்ஸ்கால் கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மதித்து, ஜியோ மீண்டும் அனைத்து வாய்ஸ் […]
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
2021 ஆம் ஆண்டில், சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை நாம் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் குஜராத் உட்பட நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வியில் வலுவடையும். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கான எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி […]