இன்றைய (28.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும்.

ரிஷபம்:

இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற இயலாத நிலை காணப்படும். இன்று சோம்பலும் மந்தத் தன்மையும் காணப்படும்.

மிதுனம்:

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் காரணமாக இன்று சிறிது அமைதியின்மை காணப்படும். இது உங்கள் முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும்.

கடகம் :

இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். நல்லது நடக்கும் என்ற உணர்வுடன் இருப்பீர்கள்.

கன்னி:

இன்று அமைதியின்மை காரணமாக உங்களிடம் உறுதியும் தைரியமும் குறைந்து காணப்படும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.

துலாம்:

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். எனவே இன்று சகஜமாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கலாம்.

விருச்சிகம்:

இன்றைய நாள் கடினமாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். பிரார்தனை மற்றும் வழிபாடு சிறந்த பயனளிக்கும்.

தனுசு:

நீங்கள் இன்று விரைந்து பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைந்து திருப்தியடைவீர்கள்.

மகரம்:

நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதனை பொறுப்புடன் செய்வீர்கள். இதனால் வளர்ச்சியும் வெற்றியும் எளிதாகப் பெறுவீர்கள்.

கும்பம்:

இன்று சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் மன உறுதியும் அவசியம். சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்கள் அவசியம்.

மீனம்:

இன்று சிக்கல் நிறைந்த நாளாக காணப்படும். வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் இன்று ஏமாற்றங்களும் நிறைந்து காணப்படும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.