இன்றைய (23.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.

மிதுனம்:

இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள்.

கடகம் :

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள்.

சிம்மம்:

இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

கன்னி:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துலாம்:

இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். இன்று நன்மையான பலன்கள் காண நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

தனுசு:

இன்று வளர்ச்சி நோக்கி செயலாற்ற உகந்த நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை பயன்படுத்துவீர்கள்.

மகரம்:

இன்று மிகவும் துடிப்பான நாளாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் உறுதியான போக்கு மற்றும் மன உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்:

இன்று முடிவுகள் எடுக்கும் போது அமைதியும் கட்டுப்பாடும் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும்.

மீனம்:

சில குடும்ப பிரச்சினை காரணமாக கவலையுடன் காணப்படுவீர்கள்.எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக செயலாற்றலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.