இன்றைய (15.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதலும் வெற்றியும் பெறலாம். இன்று வெற்றி காண யோசித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம்:

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. உங்களை நீங்களே மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம் :

இன்று நீங்கள் பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

சிம்மம்:

இன்று நீங்கள் செய்யும் செயல்களை பொறுமையுடன் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பம் உண்டாக்கும்.

கன்னி:

இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நம்பிக்கை உணர்வு மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.

விருச்சிகம்:

ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். அதன் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும்.

தனுசு:

நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிட்டும்.

மகரம்:

இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். தொண்டு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் தக்க முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

மீனம்:

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். சிறப்பான நாளாக அமையும். திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.