யூ-டியூப் தரும் புதிய அதிர்ச்சி! கண்டிப்பாக நீங்க உஷாராக இருக்கணும் மக்களே!

நேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து விட்டு காலத்தை போக்குவோரும் உண்டு. இப்படி பலவித மக்கள் உள்ளனர்.

ஆனால், எதுவாக இருந்தாலும் ஒரு விதிமுறை உள்ளது அல்லவா! யூ-டியூப்பில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நாம் செய்தால் உடனே யூ-டியூப் அதிரடி முடிவுகளை எடுக்குமாம்.

யூ-டியூப் சேனல்
முன்பெல்லாம் யூ-டியூப் என்பதே பார்ப்பதற்கு மட்டுமாக இருந்தது. ஆனால், தற்போது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஒரு யூ-டியூப் சேனலை சொந்தமாக வைத்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் பிரபலம் ஆகிவிடலாம் என்பதற்காகவும், இதன் மூலம் சுமூகமான சம்பாத்தியம் கிடைக்கும் என்பதற்காகவும் இப்படி பல சேனல்களை தொடங்கி வருகின்றனர்.

விதிமுறைகள்!
அவ்வாறு யூ-டியூப் சேனல் தொடங்கும் போது இதில் கூறப்பட்டிருக்கும் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதை தடுக்க தற்போது யூ-டியூப் ஒரு புதுவித முயற்சியை எடுத்துள்ளது. முன்பெல்லாம் விதி முறைகளை மீறுவோருக்கு 3 முன்னெச்செரிக்கைகளை யூ-டியூப் நிறுவனம் வழங்கும்.

ஆனால், இதனை அதிரடியாக மாற்ற ஒரே ஒரு முன்னெச்சரிக்கை மட்டும் கொடுக்கப்படும் என யூ-டியூப் நிறுவனம் கூறியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் அவர்களின் யூ-டியூப் சேனல் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்.

Leave a Comment