தஞ்சாவூர் மாவட்டம் அருகே இளைஞர் கொலை..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பண்ணக்கூடிய பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் கல்யாணசுந்தரம் இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்சன் வேலை செய்து வருகிறார், மேலும் கல்யாணசுந்தரம் தனது வீட்டின் முன்பு நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும் இந்த தகராறில் , கல்யாணசுந்தரத்தை அந்த இரண்டு பேர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கல்யாணசுந்தரத்தை குத்தியுள்ளனர், மேலும் இதனால் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கல்யாணசுந்தரத்தின் உறவினர் பெண்ணை நவீன் என்பவர் திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார் அதற்கு கல்யாணசுந்தரம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது

இதனால் நவீனிருக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே விரோதம் காரணமாக கல்யாணசுந்தரத்தை கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இதனை தொடர்ந்து காவல்துறையினர் நவீன் மற்றும் அவரது நண்பர் மகேந்தின் என்பவரை தேடி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.