மத்தியப் பிரதேசத்தில் லாரியின் பின்னால் கட்டிவைத்து இழுத்துச் செல்லப்பட்டு இளைஞர் உயிரிழப்பு..!

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடி இளைஞரை அவரின் கால்களில் கயிற்றை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் கண்ஹையா லால் பில் என்கிற பழங்குடி இளைஞர், வேறு சிலரோடு தன் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது இருசக்கர வண்டி குஜ்ஜர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியது. அப்போது அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கண்ஹையாவைப் பிடித்து அடித்தனர்.

மன்னித்து விடுங்கள் என கண்ஹையா லால் கூறுகிறார். இருப்பினும் குஜ்ஜர் சாதியினர் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். பின்னர், பழங்குடியின இளைஞரை தாக்கி, அவரின் கால்களில் கயிற்றை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலத்த காயமடைந்த பழங்குடியின இளைஞரை அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது ட்விட்டரில் மத்தியப் பிரதேசத்தில் இப்போது வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்தது …?
திருட்டு சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞன் எவ்வளவு கொடூரமாகத் தாக்கப்படுகிறார்? எல்லாவற்றிற்கும் மேலாக நம் மாநிலம் எங்கே போகிறது..?
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 

author avatar
murugan