ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு ஏரியை தூர்வாரும் இளைஞர்கள்!

ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு ஏரியை தூர்வாரும் இளைஞர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு அதற்கு சேர்த்து வைத்து இருந்த பணத்தில் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை தூர்வார முடிவு செய்து தூர்வாரி வருகின்றனர்.

150 ஏக்கர் கொண்ட அந்தக் குளத்தை மூன்று வருடத்தில் தூர்வாரி விடுவதாக  அந்த கிராம இளைஞர்கள் கூறுகின்றன. இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் , ஆடல் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்ததால்  வருடத்திற்கு 3 லட்சம் சேமிப்பதாக கூறினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் முப்போகம் விளைச்சலை எதிர்காலத்தில் பெறுவோம் என நம்பிக்கை உடன் அக்கிராம மக்கள்  தெரிவித்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube