உங்கள் நட்பு எந்த மரத்தை போன்றது!உன் நண்பன் யாரென்று சொல்!

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன். நம்முடைய  குணம் , நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம்.நம் வாழ்வில் நல்ல மனைவியை போல, நல்ல நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்.

நாம் அனைவரும் அம்மா, அப்பா இவங்களை விட நம் வாழ்க்கையில் அதிகமாக நேரத்தை செலவிடுவது நம்முடைய நண்பர்களுடன் தான்.இந்த நவீன காலத்தில் அனைத்து விஷயங்களும் விரைவாக நடக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் 50 ஆண்டுகள் கழித்து பிறகு பார்த்தால் நம் நினைவிற்கு வருவது நண்பர்கள் மட்டும் தான்.

இந்த உலகில் சிலர் பெற்றோர் ,  காதலி , உறவினர் இவர்கள் அனைவரும் இல்லாமலும்  கூட வாழ்ந்து இருப்பவர்களை நாம் பார்த்து இருக்கலாம். ஆனால் நண்பன் இல்லாமல் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது.

தினமும் நாளிதழ்களில் பார்க்கும்  பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக  எனது நண்பன் என கூறுவார்கள் .அதேபோல திருட்டு , கொலை போன்ற தீய செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.

எனவே நட்பு தான் நம்மை யார் என்பதை நிர்ணயிக்கின்றது . சில நேரங்களில் நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம்.இந்நிலையில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி பனைமரம், தென்னைமரம், வாழைமரம் ஆகிய மூன்று மரங்களை வைத்து எளிமையாக கூறியிருப்பார்.

பனைமரம் :

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை வைத்து தன் உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது.அதேபோல நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.

தென்னைமரம்:

தென்னை மரம்  நாம் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்திற்கு இணையானவன்.

வாழைமரம் :

வாழைமரம் தினமும் நாம் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூன்று பேரில் பனைமரம் போன்றவனை நண்பனாக  தேர்ந்தெடுக்க வேண்டும் என கண்ணதாசன் கூறினார்.

 

murugan

Recent Posts

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

4 mins ago

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

23 mins ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

30 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

31 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

34 mins ago

நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…

37 mins ago