இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்…!

சர்வதேச இளைஞர் திறன் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் .

ஐ.நா பொதுச் சபை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச இளைஞர் திறன் நாள் பற்றிய தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி சர்வதேச இளைஞர் திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நாளில் இளைஞர்களை வாழ்த்தும் வண்ணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் ‘திறன் மேம்பாட்டுத் துறை’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.