சொத்து தகராறு வழக்கில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நிதியுதவி வழங்கிய எம்.பி.கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் செல்வன். இவர் கடந்த மாதம் 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எம்.பி.கனிமொழி இளைஞன் செல்வனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.