நீ சிரிச்சா நான் சிரிக்க மாட்டேன்.! அடம்பிடிக்கும் சமந்தா, நயன்.! சிக்கிய புகைப்படங்கள்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தியரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுவருகிறது . அஜித் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதால் இந்த படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின் பொது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், ஒரு புகைப்படத்தில் சமந்தா சிரிக்கும் போது, நயன்தாரா சிரிக்கவில்லை, மற்றோரு புகைப்படத்தில் நயன்தாரா சிரிக்கும் போது, சமந்தா சிரிக்கவில்லை. இந்த இரண்டு புகைபடங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.