இனி எங்கிருந்தாலும் ஒட்டு போடலாம்! அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்??

நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பீகார் தேர்தலில் ஓட்டளிக்க அந்த மாநில வாக்காளர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
மக்கள் தங்களது சொந்தக் காரணங்களுக்காக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஓட்டு இருக்கும் மாநிலங்களில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது இவர்களால் ஓட்டு போட முடியாத நிலையே தொடர்ந்து ஏற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது.
இவர்கள் போன்றவர்களாலும் தேர்தல்களில் வாக்கு இழப்பு ஏற்படுதாக கூறப்படுகிறது.அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு நிறுவனம் நடத்தியஆய்வில் சுமார் 29 கோடி ஓட்டுகள் இழப்பு ஏற்படுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் அக்.,28ந்தேதி முதல் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது.சுமார் 7.2 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும்  பிற மாவட்டங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் கொரோனாத் தொற்று மற்றும் தேர்தலுக்காக 16.6 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மீதம் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. இவர்கள் திரும்பவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் வாக்குகள் இழப்பு ஓட்டாக மாறிவிடும்.
இதன் காரணமாகவே முதல் முறையாக பீகார் தேர்தலில், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.அவ்வாறு  பரிந்துரைகளை நவ.,3-ந்தேதி வரை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் சிறந்த 10 பரிந்துரைகள் நடுவர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மிகவும் நடைமுறை சாத்தியம் உள்ள 3 பரிந்துரைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்றும் சிறந்த பரிந்துரையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இவைகளை பீகார் தேர்தலுக்கு பின்பற்ற தேர்தல் கமிஷன் அமல்படுத்தும்  பட்சத்தில்  நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பீகார் தேர்தலில் ஓட்டளிக்க அந்த மாநில வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த நேரக்குறைவு போன்ற தடங்கல்கள் ஏற்பட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ள மே.வ தேர்தலில் அமல்படுத்தப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
Kaliraj

Recent Posts

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

19 mins ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

1 hour ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

1 hour ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

2 hours ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

2 hours ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

3 hours ago