துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் – ப்ரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு மிர்சாபூர் தங்க வைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனை சென்று சந்தித்தார். பின்னர் பேசிய அவர், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநில அரசு மக்களை காக்க தவறிவிட்டதாவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.