#BREAKING : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

#BREAKING : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பானமையை நிரூபித்தார் எடியூரப்பா.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நடைபெற்று வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள்  சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தோல்வி அடைந்தது.இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் எடியூரப்பா நான்காவது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற பின்னர் இன்று தனது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.ஆனால் நேற்று சபாநாயகர் நேற்று ராஜினாமா கடிதம் அளித்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இன்று கர்நாடக சட்டப்பேரவை நடைபெற்றது.இதில்  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளது.பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா.105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Join our channel google news Youtube