கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவித்த எடியூரப்பா.!

  • கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
  • அப்போது செய்தியர்களிடம் ,வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார். 

நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர்  மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்க்காக பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர். நகருக்கு சென்றார்.

இதையெடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர் , கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதம் ஏற்பட்டது.இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தை விட்டு சென்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் அதே கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரப்படும் கூறினார்.மேலும் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார். அவருடன் அமைச்சர் அசோக் , ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர். வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan