#BREAKING: மழையால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது-பிசிசிஐ அறிவிப்பு..!

இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

author avatar
murugan